நாமக்கல்லில் நேற்று ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் நகரப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆட்டோக்கள் சேலம் சாலை, திருச்செங்கோடு சாலை, மோகனூர் சாலை மற்றும் சேந்தமங்கலம் சாலைகளில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பயணிகள் ஆட்டோ உரிமையாளர் ஷேர் ஆட்டோ உரிமையாளர்களை மிரட்டுவதாக புகார் எழுந்தது.
இதைக்கண்டித்தும், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகையில், நாமக்கல் நகரப் பகுதியில் 50 ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. ஷேர் ஆட்டோ நடத்துபவர்களை மிரட்டுவதைக் கண்டித்து இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டோம். இதுதொடர்பாக நாமக்கல் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது, என்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
14 mins ago
வாழ்வியல்
41 mins ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
3 hours ago
ஓடிடி களம்
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago