தேஜஸ் விரைவு ரயில் திண்டுக்கல்லிலும், அமிர்தா விரைவு ரயில் ஒட்டன்சத்திரத்திலும் நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் திண்டுக்கல் திமுக எம்பி வேலுச்சாமி மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளர் லெனினிடம் மனு அளித்தார்.
முன்னதாக, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு எதிர்க்கட்சிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்க மறுக்கிறது. கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு அளித்துள்ளேன். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அனைத்து எம்பிகளையும் திரட்டி குரல் கொடுப்பேன். அதிலும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால் நாடாளுமன்றம் முன் மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட பலகட்டப் போராட்டங்களை நடத்துவோம், என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
20 mins ago
ஜோதிடம்
26 mins ago
விளையாட்டு
4 hours ago
வணிகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
தொழில்நுட்பம்
6 hours ago
சினிமா
7 hours ago
க்ரைம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago