திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில பதிவுத்துறை தலைவர் பொ.சங்கர் தலைமையில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பதிவாளர்கள், சார் பதிவாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில பதிவுத்துறைத் தலைவர் பேசியதாவது:
பதிவாளர்கள் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொண்டு, அவர்களின் நன்மதிப்பை பெற வேண்டும்.
பொதுமக்களுக்கு தேவையான பத்திரப் பதிவுகளை எவ்வித குறைபாடுகளும் இன்றி குறித்த காலத்துக்குள் பதிவு செய்துதர வேண்டும். பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை பதிவு செய்த அன்றே உரிமையாளர்களிடம் ஒப்படைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சொத்து குறித்த வில்லங்கச் சான்றிதழ்கள், ஆவண நகல்கள் ஆகியவற்றை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். சொத்துகளை பதிவு செய்யும்போது மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும். பொதுமக்களுக்கு முறையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்டப் பதிவாளர் (ஆய்வு) து.மணி, உதவி பதிவுத்துறை தலைவர்கள் கவிதா ராணி (திருநெல்வேலி), சின்னராஜ் (தூத்துக்குடி), மாவட்ட பதிவாளர் பாளையங்கோட்டை செல்வகுமாரி, மாவட்ட பதிவாளர் சேரன்மகாதேவி பாக்கியம் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
48 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
5 hours ago
ஓடிடி களம்
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
தமிழகம்
5 hours ago