ஆம்பூரில் புத்தக கண்காட்சி

By செய்திப்பிரிவு

ஆம்பூரில் புத்தகக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு புத்தக விற்பனை யாளர் சங்கம் மற்றும் ஆம்பூர் அரிமா சங்கம் சார்பில், ஆம்பூர் என்.எம். இசட். பங்ஷன் ஹாலில் புத்தகக் கண்காட்சி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அரிமா சங்கத் தலைவர் ரபீக் அகமத் தலைமை வகித்தார். செயலாளர் பாபு வர வேற்றார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதன் முதல் விற்பனையை தொடங்கி வைத் தார். அரிமா சங்க மண்டலத் தலைவர் தமீம் அகமத், மாவட்டத் தலைவர் பிர்தோஸ் அகமத், ஆம்பூர் சங்க பொருளாளர் தேவராஜ், ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன், அரிமா சங்க முன்னாள் தலைவர் கருணாநிதி, தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்க பொருளாளர் கார்த்திக், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் வேலூர் மண்டலத் தலைவர் ஆம்பூர் சி. கிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

புத்தகக் கண்காட்சியில் பல்வேறு வெளியீட்டு நிறு வனங்களின் ஆயிரக்கணக் கான புத்தகங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட் டுள்ளன.

இக்கண்காட்சி வரும் 31-ம் தேதி வரை நடைபெறும் என புத்தக விற்பனையாளர் சங்கத் தினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

1 min ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

15 mins ago

இந்தியா

51 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

மேலும்