கரூரில் ஜன.25-ல் ராகுல் பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

கரூர்: கரூரில் ஜன.25-ம் தேதி ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

கரூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

ராகுல் காந்தி தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகை தர உள்ளார். முதற்கட்டமாக ஜன.23-ம் தேதி மேற்கு மாவட்டங்களில் பிரச்சாரத்தை தொடங்கும் அவர் வரும் 25-ம் தேதி கரூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்வார். அப்போது அவர் விவசாய பிரச்சினைகள் தொடர்பாக விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து, சிறுபான்மை மக்களையும் சந்தித்துப் பேசுகிறார். இதுதவிர மேலும் 4 நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

காங்கிரஸின் பிரச்சாரம் விவசாயிகளின் பிரச்சினைகளை மையப்படுத்தி இருக்கும். பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்கான நெருக்கடி அதிகரித்துள்ளது. பாஜக அரசின் 3 வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளுக்கு பாதகமாக உள்ள புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்றார். அப்போது, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், கரூர் எம்.பி. செ.ஜோதிமணி, மாவட்டத் தலைவர் ஆர்.சின்னசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்