ரூ.21 லட்சம் மோசடி செய்ததாக முதியவர் கைது

By செய்திப்பிரிவு

கோவை: கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் நடராஜ் தேவர் காலனியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் சதீஷ்குமார் (36). வேலை இல்லாமல் இருந்த சதீஷ்குமாரை அணுகிய ரத்தினபுரி சேகர் (62), தனக்கு முக்கியப் பிரமுகர்களை தெரியும் என்றும், அவர்கள் மூலமாக அரசு வேலை வாங்கித் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய சதீஷ்குமார், 2015-ல் சேகரிடம் ரூ.21 லட்சம் அளித்துள்ளார். பல மாதங்களாகியும் வேவை வாங்கித் தரவில்லை. சில நாட்கள் கழித்து ரூ.5 லட்சத்தை மட்டும் திருப்பி அளித்த சேகர், மீதம் ரூ.16 லட்சத்துக்கு வங்கிக் காசோலை அளித்துள்ளார். அதை வங்கியில் செலுத்தியபோது, வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்பது தெரியவந்தது. பணத்தை திருப்பிக் கேட்டதற்கு, கொலை செய்துவிடுவதாக சேகர் மிரட்டினாராம். இதையடுத்து, ராமநாதபுரம் காவல் நிலையத்தில் சதீஷ்குமார் புகார் செய்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், சேகரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

ஓடிடி களம்

6 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்