பொங்கலை முன்னிட்டு ரிப்பன் மாளிகை வளாகத்தில் சாலையோர வியாபாரிகள் தயாரித்த உணவு விற்பனை

By செய்திப்பிரிவு

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 27,195 சாலையோர வியாபாரிகள் உள்ளனர். அவர்களில் உணவு வகைகளை தயார் செய்து விற்பனை செய்யும் தொழிலில் 1,500வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மாநகராட்சி சார்பில், பிரபல உணவு விநியோக சேவை நிறுவனங்கள் மூலம் தரமான, சுவையான உணவு தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. . அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை வங்கிகள் மூலமாக சிறுகடன் வழங்கவும் மாநகராட்சி ஏற்பாடு செய்து வருகிறது.

தற்போது பொங்கலை முன்னிட்டு ரிப்பன் மாளிகை வளாகத்தில், அவர்கள் தயாரித்த உணவுவிற்பனை கண்காட்சி நேற்று நடைபெற்றது. அதில் மாநகராட்சி வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டிபாபுபங்கேற்று உணவு விற்பனைகண்காட்சியை தொடங்கிவைத்தார். மாநகராட்சியில் பணியாற்றும் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் மாநகராட்சியில் பல்வேறு சேவைகளை பெற வந்த பொதுமக்கள், சாலையோர வியாபாரிகளின் உணவு வகைகளை வாங்கி உண்டனர். இந்நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெற்ற கோலப்போட்டியில் வெற்றிபெற்ற மகளிர் பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

5 mins ago

விளையாட்டு

59 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்