அந்தியூர் வனப்பகுதியில் யானை உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ஈரோடு: அந்தியூர் அருகே வனப்பகுதியில் வயது முதிர்ச்சி காரணமாக ஆண் யானை உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து மேற்கொண்டபோது, கோவிலூர் புதுக்காடு வனப்பகுதியில் யானை ஒன்று இறந்து கிடப்பதைக் கண்டறிந்தனர். வனச்சரகர் செங்கோட்டையன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் யானையை உடற்கூறு ஆய்வு செய்தனர்.

இதில் உயிரிழந்த யானை சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பதும், வயது முதிர்ச்சி காரணமாக சரிவர உணவு உட்கொள்ள முடியாமல் உயிரிழந்துள்ளதாகவும் மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்

யானையின் 2 மீட்டர் நீளம் கொண்ட தந்தத்தை வெட்டி எடுத்துக் கொண்ட வனத்துறையினர், இதர விலங்குகளின் உணவுக்காக யானையின் உடலை வனப்பகுதியிலேயே விட்டுச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

41 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்