சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக பேருந்து நிலையங்களுக்கு 24 மணி நேரமும் மாநகர இணைப்பு பேருந்துகள் 3 நாட்கள் இயக்கப்படுகின்றன.
இதுதொடர்பாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 11-ம் தேதி (நேற்று) 2,226 பேருந்துகள், 12-ம் தேதி (இன்று) 4,000 பேருந்துகள், 13-ம் தேதி (நாளை) 3,875 பேருந்துகள், 14-ம் தேதி 4,002 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5,993 பேருந்துகள் என மொத்தம் 16,221 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேடு, தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் பிரித்து இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையங்களுக்கு மக்கள் செல்ல வசதியாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 310 மாநகர இணைப்பு பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்பட உள்ளன.
பிராட்வே, திருவான்மியூர், திருவொற்றியூர், அடையாறு, செங்கல்பட்டு, திருப்போரூர், தி.நகர், தாம்பரம், பூந்தமல்லி, மந்தைவெளி, அண்ணா சதுக்கம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இந்த மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
4 hours ago
உலகம்
4 hours ago