ஊதிய உயர்வு வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு

By செய்திப்பிரிவு

நாமக்கல்: ஊதிய உயர்வு கேட்டு தமிழ்நாடு கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:

நாமக்கல் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொசுப்புழு ஒழிப்பு பணியில் கடந்த 10 ஆண்டு காலமாக மிகக்குறைந்த தினக்கூலி அடிப்படையில் பணி புரிந்து வருகிறோம். இதன்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் தலா 20 நபர்கள் வீதம் பணிபுரிகிறோம். கூலியாக ரூ.285 வழங்கப்படுகிறது. இக்குறைந்த ஊதியத்தைக் கொண்டு குடும்பத்தை காப்பாற்றவும், குழந்தைகளை படிக்கவைக்கவும் முடியவில்லை.

எனவே, தினக்கூலித்தொகையை ரூ.500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். வேலை பார்க்கும் பழைய ஊழியர்களை நிறுத்தி விட்டு புதிய ஊழியர்களை நியமனம் செய்வதை கைவிடவேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்