திருநெல்வேலி: திருநெல்வேலியில் மரம் முறிந்து விழுந்து, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர் உயிரிழந்தார்.
சுத்தமல்லி அருகே பழவூரைச் சேர்ந்தவர் கொம்பையா(30). இவரும் பேட்டையைச் சேர்ந்த கனி என்பவரும் செய்துங்கநல்லூரில் உள்ள பேக்கரியில் பணிபுரிந்து வந்தனர். பணி முடிந்து நேற்று மாலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருநெல்வேலிக்கு வந்து கொண்டிருந்தனர். வி.எம். சத்திரத்தை அடுத்துள்ள ஆரோக்கியநாதபுரத்தில் சாலையோர மரம் திடீரென்று முறிந்து அவர்கள் மீது விழுந்தது.
மரத்துக்கு அடியில் சிக்கிய கொம்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கனிக்கு கால் முறிவு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு படையினர் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
வாழ்வியல்
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
7 hours ago
ஓடிடி களம்
8 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
தமிழகம்
8 hours ago