கோவை: கோவை மதுக்கரை பகுதியில் 38 வயது மதிக்கத்தக்க பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, 15 வயது மகளுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அப்பெண்ணுக்கு வெங்கிடாபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியத்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
2017 ஜூன் 20-ம் தேதி சிறுமியின் தாயார் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டுக்கு வந்த சுப்பிரமணியன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக சிறுமி அவரது தாயாரிடம் தெரிவித்தபோது, சிறுமியை தாயார் சமாதானப்படுத்தியுள்ளார். ஆறு மாதம் கழித்து அச்சிறுமி அவரது தந்தை வீட்டுக்குச் சென்றபோது நடந்த சம்பவங்களை விவரித்துள்ளார்.
இதையடுத்து, சிறுமியின் தந்தை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு சிறுமியை அழைத்துச் சென்று, 2018 ஆகஸ்ட் 18-ம் தேதி புகார் அளித்தார். விசாரணை மேற்கொண்ட பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து, சுப்பிரமணியன் மற்றும் சிறுமியின் தாயாரைக் கைது செய்தனர். இந்த வழக்கு போக்ஸோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா, குற்றம் சுமத்தப்பட்ட இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 mins ago
ஜோதிடம்
19 mins ago
ஜோதிடம்
32 mins ago
வாழ்வியல்
37 mins ago
ஜோதிடம்
1 hour ago
க்ரைம்
53 mins ago
இந்தியா
1 hour ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago