அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி

By செய்திப்பிரிவு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள இலையூர் கோரியம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(51). விவசாயி. இவர் தன் மனைவி ராஜவள்ளி(47), மகன்கள் கபிலன்(19), தமிழன்(16) ஆகியோருடன் நேற்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் மனைவி மகன்களுடன் தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீஸார் அவர்களை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில், பாகப்பிரிவினையின்போது, தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை, தனது தம்பி மனைவி செந்தமிழ்செல்வி உரிமை கொண்டாடி, அந்த இந்த இடத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காமல் தகராறு செய்வதால் தீக்குளிக்க முயன்றதாக போலீஸாரிடம் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

25 mins ago

க்ரைம்

39 mins ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

47 mins ago

க்ரைம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்