நந்தா பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரியில் இணையவழி மூலம் முதலாமாண்டு வகுப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

ஈரோடு நந்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா இணையவழி மூலம் நடைபெற்றது.  நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

விழாவில் கலந்து கொண்ட மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் நந்தா பொறியியல் கல்லூரி சார்பில் முதல்வர் என்.ரெங்கராஜன் மற்றும் நந்தா தொழில்நுட்ப கல்லூரியின் சார்பில் முதல்வர் முனைவர் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் வரவேற்று பேசினர்.  நந்தா கல்வி அறக் கட்டளையின் செயலர் எஸ்.நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.திருமூர்த்தி மற்றும் நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் இயக்குநர் ஜெ. செந்தில்ஆகியோர் முதலாமாண்டு மாணவ, மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர்களை வாழ்த்திப்பேசினர்.

பொறியியல் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் ஆர்.திருநீலகண்டன், தொழில்நுட்ப கல்லூரி முதலாம் ஆண்டு துறைத்தலைவர் கே.எம். ராஜேந்திரன் ஆகியோர் நன்றி கூறினர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்