30 பவுன் நகை கொள்ளை வழக்கில் பக்கத்து வீட்டுப் பெண் உட்பட 5 பேர் கைது

By செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டையில் வீட்டில் பெண்ணைக் கட்டிப்போட்டு 30 பவுன் நகை கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், பக்கத்து வீட்டுப் பெண் மற்றும் 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

அருப்புக்கோட்டை கணேஷ் நகரைச் சேர்ந்தவர் ராம்குமார் (39). மனைவி ஜெபகிருபா (33). கடந்த 10-ம் தேதி இரவு இவர் தனது குழந்தைகளுடன் வீட் டில் இருந்தார். அப்போது, 4 நபர்கள் அழைப்பிதழ் கொடுக்க வந்துள்ளதாகக் கூறி, வீட்டுக்குள் நுழைந்து ஜெபகிருபாவைக் கட்டிப் போட்டு கத்தியைக் காட்டி மிரட்டி 30 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

அருப்புக்கோட்டை நகர் போலீஸார் விசாரித்தனர். இந் நிலையில், கோவிலாங்குளத்தில் நடந்த வாகன சோதனையில் 4 பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் 30 பவுன் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பிருப்பதும் மதுரையைச் சேர்ந்த ஹரிஹரன், கணேஷ்குமார், சோலைசாமி, அருண்பாண்டியன் என்பதும் தெரியவந்தது.

மேலும், விசாரணையில், ஜெப கிருபாவின் வீட்டின் அருகே வசிக் கும் முத்துச்செல்வி என்பவர் இக்கொள்ளைக்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது.

முத்துச்செல்வி உட்பட 5 பேரை யும் கைதுசெய்த போலீஸார் நகைகளை மீட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்