சதாப்தி சிறப்பு விரைவு ரயில் டிசம்பர் 2-ம் தேதியுடன் நிறுத்தம்

By செய்திப்பிரிவு

சேலம் வழியாக இயக்கப்பட்டு வரும் சென்னை-கோவை சதாப்தி சிறப்பு விரைவு ரயில் பிப்ரவரி 2-ம் தேதியுடன் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சேலம் வழியாக சென்னை சென்ட்ரல்-கோவை (எண்-06027), கோவை- சென்னை சென்ட்ரல் (எண்-06028)என இருமார்கத்தில் சதாப்தி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சதாப்தி விரைவு ரயிலில், பயணம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

எனவே, சதாப்தி விரைவு ரயில் இயக்கம் இருமார்க்கத்திலும் வரும் டிசம்பர் 2-ம் தேதியுடன் நிறுத்தப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. டிசம்பர் 1-ம் தேதி செவ்வாய் கிழமை என்பதால் ரயில் இயக்கம் இரு மார்க்கத்திலும் வரும் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

15 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்