சேலம் வழியாக இயக்கப்பட்டு வரும் சென்னை-கோவை சதாப்தி சிறப்பு விரைவு ரயில் பிப்ரவரி 2-ம் தேதியுடன் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சேலம் வழியாக சென்னை சென்ட்ரல்-கோவை (எண்-06027), கோவை- சென்னை சென்ட்ரல் (எண்-06028)என இருமார்கத்தில் சதாப்தி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சதாப்தி விரைவு ரயிலில், பயணம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
எனவே, சதாப்தி விரைவு ரயில் இயக்கம் இருமார்க்கத்திலும் வரும் டிசம்பர் 2-ம் தேதியுடன் நிறுத்தப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. டிசம்பர் 1-ம் தேதி செவ்வாய் கிழமை என்பதால் ரயில் இயக்கம் இரு மார்க்கத்திலும் வரும் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
சினிமா
15 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
8 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
11 hours ago