அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் நடத்தாத பாடத்துக்கு நடத்தப்பட்ட தேர்வு கேள்விகளையே பதிலாக எழுதிக்கொடுத்த மாணவிகள்

By செய்திப்பிரிவு

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் முதுகலை பொருளா தார படிப்பில் பாடம் நடத்தப்படாமலேயே தேர்வு நடத்தப்பட்ட தால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் கேள்வியையே பதிலாக எழுதி கல்லூரி முதல்வரிடம் கொடுத்து விட்டுச் சென்றனர்.

கரோனா தொற்று பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், சம்பந்தப்பட்ட பாடங்களை இணையவழியில் நடத்திட கல்லூரி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, தமிழகத்திலுள்ள கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கு இணையவழியில் பாடம் நடத்தப்பட்டு, தற்போது தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறே அரியலூர் அரசு கலைக்கல்லூரியிலும் தேர்வுகள் நடைபெற்று வருகின் றன. இக்கல்லூரியில் பயிலும் முதுகலை 2-ம் ஆண்டு பொருளாதார மாணவிகளுக்கான தேர்வு நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு கேள்வித்தாளும் இணையவழியில் அனுப்பப் பட்டது.

அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் 37 பேர், கேள்வித்தாளை பதிவிறக்கம் செய்துகொண்டு கல்லூரிக்கு வந்தனர். பொருளாதார பாடமே இணையவழியில் நடத்தப்படாத நிலையில், தேர்வை எப்படி எழுதுவது எனத் தெரியாமல் பரிதவித்தனர்.

பின்னர், கேள்விகளையே விடைத்தாளில் எழுதி கல்லூரி முதல்வர் மலர்விழியிடம் கொடுத்துவிட்டு, துறைத் தலைவர் முறையாக இணைய வழியில் பாடம் நடத்தவில்லை. ஆகவே, இந்த தேர்வை மறுபடியும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவிட்டுச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

இந்தியா

18 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

45 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

53 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

38 mins ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

மேலும்