3 எம்.பி., 29 எம்எல்ஏ தொகுதிகளுக்கு - 14 மாநிலங்களில் இடைத்தேர்தல் :

By செய்திப்பிரிவு

நாட்டின் 13 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் காலியாக உள்ள 3 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 29 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடை பெறுகிறது.

மத்தியபிரதேசத்தில் கந்த்வா, இமாச்சலபிரதேசத்தில் மண்டி, யூனியன் பிரதேசமான தாத்ரா நாகர் ஹாவேலி ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதுபோல் 13 மாநிலங்களில் 29 பேரவைத் தொகுதிகள் இன்று இடைத்தேர்தலை சந்திக்கின்றன. அசாம் (5 தொகுதிகள்), மேற்கு வங்கம் (4), ம.பி., இமாச்சலபிரதேசம், மேகாலயா (தலா 3), பிஹார், கர்நாடகா, ராஜஸ்தான் (தலா 2), ஆந்திரா, ஹரியாணா, மகாராஷ்டிரா, மிசோரம், தெலங்கானா (தலா 1) ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை வரும் செவ்வாய்க்கிழமை (நவ. 2) நடைபெற உள்ளது. அசாமில் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. இமாச்சலபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்நடைபெற உள்ளதால் இடைத்தேர்தல் முடிவு முக்கியமானதாக உள்ளது. இதுபோல் பல்வேறு கட்சிகளுக்கும் பல்வேறு காரணங்களுக்காக இத்தேர்தல் முக்கிய

மானதாக அமைந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்