ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சைனபோரா பகுதியில் சிஆர்பிஎப் முகாம் அமைந்துள்ளது.
இந்நிலையில், நேற்று காலை சுமார் 10.30 மணியளவில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதி ஒருவர், சிஆர்பிஎப் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதை யடுத்து, அங்கிருந்த சிஆர்பிஎப் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். அப்போது அந்த வழியாக சென்ற இளைஞர் ஒருவரின் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தீவிரவாதி அங்கிருந்து தப்பிச் சென்றார்.
விசாரணையில், உயிரிழந்த இளைஞர் அனந்த்நாக் மாவட் டத்தைச் சேர்ந்த ஷாகித் அய்சஸ் ராத்தர் (20) என்பதும், அந்தப் பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது.
இதேபோல, கடந்த 7-ம் தேதியன்று, அனந்த்நாக் மாவட் டத்தில் ஒரு சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிள் மீது சிஆர்பிஎப் படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அதே பகுதியைச் சேர்ந்த அப்பாவி பழங்குடியின இளைஞர் பர்வேஸ் அகமது என்ற இளைஞர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
10 mins ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
வணிகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
உலகம்
10 hours ago