புதுடெல்லி: இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே, கரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்ததை தொடர்ந்து, அதே ஆண்டு மே மாதம் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால், 33 சதவீத பயணிகளுடன் மட்டுமே விமானங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர், படிப்படியாக இந்த எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. தற்போது 85 சதவீத பயணிகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கரோனா பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, வரும் 18-ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்கள் 100% பயணிகளுடன் இயங்க விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியிருக்கிறது. அதேநேரம், கரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும் என விமான நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
25 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
8 hours ago