பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். இந்த சூழலில், முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் டெல்லியில் முகாமிட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் எம்எல்ஏவாக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார்.ஆனா லும், அமரீந்தர் சிங்குடனான மோதலை சித்து கைவிடவில்லை. இதுபோன்ற சூழலில், யாரும் எதிர்பாராதவிதமாக கடந்த 18-ம் தேதிதனது முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியை சித்து நேற்று திடீரென ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் எழுதிய கடிதத்தில், “பஞ்சாபின் எதிர்காலத்திலும், நலனிலும் எந்தக் காலத்திலும் என்னால் என்றும் சமரசம் செய்துகொள்ள முடியாது. அதனால் பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பை நான் ராஜினாமா செய்கிறேன். காங்கிரஸுக்காக தொடர்ந்து உழைப்பேன்" என அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார். அவர் மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷாவைசந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் பாஜகவில் இணையக்கூடும் என்ற பேச்சும் எழுந்துள்ளது. ஆனால், அமரீந்தர் சிங்கின் செய்தித் தொடர்பாளர் இதனை முற்றிலுமாக மறுத்தார்.
அமைச்சர், பொதுச்செயலர் விலகல்
இதற்கிடையே, சித்துவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பஞ்சாப் கேபினட் அமைச்சராக இருந்த ரஸியா சுல்தானா தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அதேநேரம் காங்கிரஸ் தொண்டராக தொடர்ந்து பணியாற் றுவேன் எனக் கூறியுள்ளார். இதுபோல சித்துவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து யோகிந்தர் பால் திங்ராவும் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். - பிடிஐமுக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
31 mins ago
கல்வி
33 mins ago
தமிழகம்
35 mins ago
இணைப்பிதழ்கள்
59 mins ago
தமிழகம்
37 mins ago
இந்தியா
1 hour ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago