24 மணி நேரத்தில் 44,230 பேருக்கு தொற்று :

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாட்டில் புதிதாக 44,230 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்து முந்தைய நாள் பாதிப்பான 43,509-ஐ காட்டிலும் சற்று அதிகம் ஆகும். நாட்டின் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை தற்போது 3 கோடியே 15 லட்சத்து 72,344 ஆக உள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 555 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 23,217 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 42,360 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் இவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 7 லட்சத்து 43,972 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு தற்போது 4 லட்சத்து 5,155 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

இதுவரை 46 கோடியே 46 லட்சத்து 50,723 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 45 கோடியே 60 லட்சத்து 33,754 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 51 லட்சத்து 83 ஆயிரத்து 180 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. -பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுலா

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்