சமூக ஆர்வலர் பாதிரியார் ஸ்டான் சுவாமி மும்பை மருத்துவமனையில் காலமானார் :

By செய்திப்பிரிவு

மும்பை: திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட பாதிரியாரும் சமூக செயற்பாட்டாளருமான ஸ்டான் சுவாமி (84). ஜார்க்கண்டில் பழங்குடியினர் நலனுக்காக குரல் கொடுத்தவர். எல்கர் பரிஷத் அமைப்பு மற்றும் மாவோயிஸ்ட்கள் இடையிலான தொடர்பு குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த இவரை, என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்தனர். மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை நேற்று முன்தினம் மோசமடைந்ததால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணம் அடைந்தார்.

இவரது ஜாமீன் மனு மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வரவிருந்தது. இந்நிலையில் ஸ்டான் சுவாமி மரணம் அடைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

40 mins ago

சினிமா

48 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்