ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு காய்கறி வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான கஞ்சாவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து பெங்களூருவை சேர்ந்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு வட்டாரங்கள் கூறியதாவது:
ஹைதராபாத்தில் இருந்துபெங்களூருவுக்கு சாலை மார்க்கமாக கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, பெங்களூரு, ஹைதராபாத் மண்டல அதிகாரிகள் இணைந்து தேசிய நெடுஞ்சாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு, ஹைதராபாத்தை அடுத்துள்ள பெட்டா அம்பர்பேட் சோதனைச் சாவடியில் காய்கறி வேன் ஒன்றை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதில் 100-க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில் காய்கறிகளுக்கு நடுவே மறைத்து வைத்திருந்த கஞ்சாவை கண்டுபிடித்தனர். இதில் மொத்தமாக 2 டன்எடையுள்ள கஞ்சா போதைப்பொருள் சிக்கியது. இதன் சந்தை விலை ரூ.15 கோடி ஆகும். இந்தகஞ்சாவை கடத்திய மகாராஷ்டிராவைச் சேர்ந்த காளே, தாரல்கர் உள்ளிட்ட 4 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஆந்திராவில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் கஞ்சா பயிரிடப்பட்டு பெங்களூரு, சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு கடத்தப்படுகிறது. தற்போது சிக்கியுள்ளகஞ்சா, பெங்களூருவுக்கு கொண்டுவரப்பட்டு பிற நகரங்களுக்குஅனுப்ப இருந்தது தெரியவந்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
13 mins ago
சுற்றுச்சூழல்
23 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
2 hours ago
தமிழகம்
2 hours ago
இணைப்பிதழ்கள்
2 hours ago
தமிழகம்
2 hours ago