மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் ஆளுநர் மீண்டும் சந்திப்பு :

By செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தில் பல்வேறு விவகாரங்களில் முதல்வர் மம்தாவுக்கும் ஆளுநர் ஜெகதீப் தன்கருக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் குறித்து ஆளுநர் தன்கர் கவலை தெரிவித்து வருகிறார். இந்த வன்முறைகள் குறித்து அவர் மத்திய அரசுக்கு ஏற்கெனவே அறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் தன்கர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் டெல்லியில் இருந்து வருகிறார். அவர் இந்தப் பயணத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, பிரகலாத் சிங் படேல் உள்ளிட்டோரை சந்தித்தார். கடந்த வியாழக்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் தன்கர் சந்தித்தார். இந்த சந்திப்பில் மேற்கு வங்க சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து அமைச்சரிடம் எடுத்துரைத்ததாக அவர் கூறினார்.

இந்நிலையில் நேற்று இரண்டாவது முறையாக மத்திய அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் தன்கர் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைப்பதற்கான தருணம் இது. மேற்கு வங்க அதிகாரிகளும் காவல் துறையினரும் தங்கள் நடத்தை விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நாடு சுந்திரம் அடைந்த பிறகு, மிக மோசமான ‘தேர்தலுக்குப் பிந்தையை வன்முறை’ மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

56 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்