மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த முகுல் ராய், அக்கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு முகுல் ராய் பாஜக.வில் இணைந்தார். அவருக்கு பாஜக தேசிய துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
மேற்கு வங்க தேர்தலிலும் பாஜக சார்பில் போட்டியிட்டு முகுல் ராய் வெற்றி பெற்றார். தேர்தலில் அறுதி பெரும்பான்மையுடன் திரிணமூல் வெற்றி பெற்றது.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், முகுல் ராய் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திரிணமூல் காங்கிரஸில் மீண்டும் இணைந்தார்.
இந்த சூழலில், முகுல் ராய்க்கு வழங்கப்பட்டிருந்த ‘இசட்' பிரிவு பாதுகாப்பு சில தினங்களுக்கு முன்பு திரும்பப் பெறப்பட்டது. திரிணமூல் காங்கிரஸில் முகுல் ராய் இணைந்ததால் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இந்த செய்தியை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “தனக்கு வழங்கப்பட்டு வந்த ‘இசட்' பிரிவு பாதுகாப்பை முகுல் ராய் தான் திரும்ப ஒப்படைத்தார். மத்திய அரசு தானாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை” என்று தெரிவித்தார்.-பிடிஐ
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
இந்தியா
34 mins ago
ஆன்மிகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
சினிமா
3 hours ago