கரோனா பாதிப்பு 4-வது நாளாக 1 லட்சத்துக்கும் கீழே குறைந்தது :

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று பாதிப்பு நாடு முழுவதும் குறைந்து வருகிறது. ஏற்கெனவே 3 நாட் களாக கரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் கீழே குறைந்தது. 4-வது நாளாக நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் 91,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் கரோனா தொற்றுக்கு 3,403 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனாவுக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த 1 லட்சத்து 34,580 பேர் நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து, நாடு முழுவதும் சிகிச்சை பெறு வோர் எண்ணிக்கை 11 லட்சத்து 21,671 ஆக குறைந்துள்ளது. குணமடைந் தோர் சதவீதம் 94.93 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 2 கோடியே 77 லட்சத்து 90,073 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் இதுவரை 37.42 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 20 லட்சத்து 44 ஆயிரத்து 131 மாதிரிகள் பரிசோதிக்கப்படட்டன. இந்தத் தகவல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு 78 சதவீதம் சரிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த மே 7-ம் இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது. அன்றைய தினம் 4 லட்சத்து 16,118 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது நேற்றைய கரோனா பாதிப்பு 78 சதவீதம் சரிந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

தமிழகம்

12 mins ago

இந்தியா

18 mins ago

தமிழகம்

28 mins ago

சினிமா

39 mins ago

சினிமா

53 mins ago

தமிழகம்

43 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

56 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

58 mins ago

வணிகம்

2 hours ago

மேலும்