கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வேன் : யோகா குரு பாபா ராம்தேவ் பேச்சு :

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அலோபதி மருத்துவத்தையும், டாக்டர்களையும் கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்டவர் ராம்தேவ். அதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் தனது கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்டார் ராம்தேவ். இந்நிலையில், செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

என்னுடைய போராட்டம் டாக்டர்களுக்கு எதிரானது அல்ல. ‘மருந்து மாபியா’ கும்பலுக்கு எதிரானது. கரோனா தடுப்பு மருந்துகளுக்கு எதிராக நான் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. விரைவில் நானே தடுப்பூசி போட்டுக் கொள்வேன். டாக்டர்கள் கடவுளின் தூதுவர்கள்.

பெரிய கம்பெனிகளின் மருந்துகளுக்கும், மத்திய அரசு நாடு முழுவதும் திறந்துள்ள ஜெனரிக் மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகளுக்கும் உள்ள விலை வேறுபாடுகளைப் பாருங்கள். மருந்து மாபியாக்கள், ‘பேன்சி ஸ்டோர்களை’ திறந்து வைத்துள்ளார்கள். ஆனால், மத்திய அரசு விலை குறைந்த மருந்தகங்களை திறந்துள்ளது. நாங்கள் எந்த நிறுவனத்துக்கும் எதிரானவர்கள் அல்லர். நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.

இவ்வாறு ராம்தேவ் கூறினார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

தமிழகம்

17 mins ago

ஓடிடி களம்

38 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சுற்றுலா

5 mins ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்