புதுடெல்லி: அலோபதி மருத்துவத்தையும், டாக்டர்களையும் கடுமையாக விமர்சித்து கருத்து வெளியிட்டவர் ராம்தேவ். அதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் தனது கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்டார் ராம்தேவ். இந்நிலையில், செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:
என்னுடைய போராட்டம் டாக்டர்களுக்கு எதிரானது அல்ல. ‘மருந்து மாபியா’ கும்பலுக்கு எதிரானது. கரோனா தடுப்பு மருந்துகளுக்கு எதிராக நான் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. விரைவில் நானே தடுப்பூசி போட்டுக் கொள்வேன். டாக்டர்கள் கடவுளின் தூதுவர்கள்.
பெரிய கம்பெனிகளின் மருந்துகளுக்கும், மத்திய அரசு நாடு முழுவதும் திறந்துள்ள ஜெனரிக் மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகளுக்கும் உள்ள விலை வேறுபாடுகளைப் பாருங்கள். மருந்து மாபியாக்கள், ‘பேன்சி ஸ்டோர்களை’ திறந்து வைத்துள்ளார்கள். ஆனால், மத்திய அரசு விலை குறைந்த மருந்தகங்களை திறந்துள்ளது. நாங்கள் எந்த நிறுவனத்துக்கும் எதிரானவர்கள் அல்லர். நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.
இவ்வாறு ராம்தேவ் கூறினார். - பிடிஐ
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 mins ago
தமிழகம்
17 mins ago
ஓடிடி களம்
38 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
சுற்றுலா
5 mins ago
தமிழகம்
32 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago