இந்தியாவில் கரோனா தொற்று 1.32 லட்சமாக குறைந்தது :

By செய்திப்பிரிவு

நாட்டில் ஒரே நாளில் புதிதாக 1.32 லட்சம் பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 10 நாட் களாகவே கரோனா தொற்று எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரையான 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 32ஆயிரத்து 788 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால், நாடு முழுவதும்கரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 2.8 கோடிக்கும் அதிகமாக உள்ளது. 2 லட்சத்து 31 ஆயிரத்து 456 பேர் கரோனா பாதிப்பில் இருந்துமீண்டுள்ளனர். குணமடைந் தோரின் எண்ணிக்கை 2 கோடியே 61 லட்சத்து 79 ஆயிரத்து 85 ஆக உள்ளது.

தற்போது 17 லட்சத்து 93 ஆயிரத்து 645 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 மணிநேரத்தில் 3,207 பேர் இறந்துள்ளனர். இதுவரை நாட்டில் மொத்தம் 3,35,102 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது கரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 92.48 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.18 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 6.34 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 20 லட்சத்து 19,773 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 35 கோடியே 57 ஆயிரத்து 330 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

19 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

உலகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்