இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் - 1.52 லட்சம் பேர் கரோனாவால் பாதிப்பு : 50 நாட்களுக்கு பிறகு கணிசமாக குறைந்தது

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.52 லட்சம் பேர் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த 50 நாட்களுக்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.

அதேபோல் தினசரி உயிரிழப்பும் தற்போது கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3,128 பேர் இறந்துள்ளனர். ஒரு மாதத்துக்குப் பிறகு குறைந்த எண்ணிக்கையில் இறப்பு பதிவாகி உள்ளது. இதுவரை தொற்றுக்கு 3 லட்சத்து 29 ஆயிரத்து 100 பேர் இறந்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் 2 கோடியே 80 லட்சத்து 47,534 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கரோனா தொற்றில் இருந்து இதுவரை 2 கோடியே 56 லட்சத்து 92,342 பேர் குண மடைந்துள்ளனர்.

இது ஒட்டுமொத்த குணமடைந் தோரில் 91.6 சதவீதமாகும். கடந்த 18 நாட்களாகவே தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 லட்சத்து 38, 022 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும், கரோனா பாதிப்பு அதிகம் காணப்பட்ட தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, அசாம் மாநிலங்களிலும் தற்போது கணிசமாக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 16 லட்சத்து 83, 135 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 34.5 கோடி பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்று ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

11 mins ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்