சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் பெண் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை :

By செய்திப்பிரிவு

ராய்பூர்: சத்தீஸ்கரின் தந்தேவாடா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் பெண் மாவோயிஸ்ட் ஒருவர் கொல்லப்பட்டார்.

தந்தேவாடா மாவட்டத்தின் கீடாம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் நேற்று காலையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் குமல்னார் என்ற கிராமத்துக்கு அருகில் பாதுகாப்பு படையினர் – மாவோயிஸ்ட்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாவோயிஸ்ட்கள் தாக்குபிடிக்க முடியாமல் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திலிருந்து வைகோ பெக்கோ (24) என்ற பெண் மாவோயிஸ்ட் உடலை பாதுகாப்பு படையினர் மீட்டனர்.

பீஜப்பூர் மாவட்டம், பைராம்கர் பகுதியை சேர்ந்த இவர், மாவோயிஸ்ட் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இவரது தலைக்கு போலீஸார் ரூ.2 லட்சம் வெகுமதி அறிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திலிருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகள், ஒரு வெடிகுண்டு, மாவோயிஸ்ட் விளம்பரப் பொருட்கள், மருந்துகள் மற்றும் அன்றாட பயன்பாட்டுக்கான பொருட்களை போலீஸார் கைப்பற்றினர்.

அருகில் உள்ள வனப் பகுதியில் மாவோயிஸ்ட்களை தேடும் பணியை பாதுகாப்பு படையினர் தொடர்கின்றனர். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்