முகக்கவசம் அணியாததால் பெண் மீது தாக்குதல் நடத்திய ம.பி. போலீஸார் :

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தின் ராஹ்லி பகுதியில் கடந்த திங்கள்கிழமை போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர், முகக்கவசம் அணியவில்லை எனக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்திய போலீஸார், முகக்கவசம் அணியாத காரணத்திற்காக அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அப்பெண், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீஸார் அவரை கடுமையாக தாக்கி, அவரது தலை முடியை பிடித்து இழுத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பெண்ணை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

4 mins ago

தமிழகம்

8 mins ago

சினிமா

25 mins ago

தொழில்நுட்பம்

30 mins ago

இந்தியா

12 mins ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்