கேரளாவின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரான கே.ஆர். கவுரி அம்மாள் (102) வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் காலமானார். 1919-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பட்டனக்காட்டில் பிறந்தார்.
இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் நிறைந்தவராக கவுரி அம்மாள் இருந்தார். 1948-ல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, கட்சியை வளர்க்கும் பொறுப்பில் இணைந்தார். திருவிதாங்கூர் கொச்சின் சட்டப்பேரவைக்கு 1952, 1954-ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். கேரள அரசியலில் பெண் அரசியல் தலைவர்களில் மிகவும் சக்தி மிக்கவராக விளங்கினார்.கேரளாவின் முதல் சட்டப்பேரவையில் உறுப்பினர்களில் இதுவரை உயிரோடு இருந்தவரும் கவுரி அம்மாள்தான்.
இஎம்எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான முதல் கம்யூனிஸ்ட் அரசில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த கவுரி அம்மாள், நிலச் சீர்திருத்தங்களை அமல்படுத்தினார். கவுரி அம்மாள் மறைவுக்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
18 mins ago
ஜோதிடம்
22 mins ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
தமிழகம்
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
தமிழகம்
10 hours ago