கேரளாவில் கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் 8-ம் தேதி (நாளை) முதல் 16-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரளாவில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக் கிறது. 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 41,953 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 17 லட்சத்து 43 ஆயிரத்து 932 ஆக உயர்ந்துள்ளதாக கேரள சுகாதாரத் துறை நேற்று தெரிவித்தது.
பினராயி உத்தரவு
கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் 8-ம் தேதி (நாளை) முதல் வரும் 16-ம் தேதி வரை மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. மாநிலம் முழுவதும் 8-ம் தேதி காலை 6 மணி முதல் 16-ம் தேதி வரை முழுமையான ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார். கரோனா தொற்ின் இரண்டாவது அலையின் கடுமையான தாக்கத்தை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
இந்தியா
3 hours ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
சினிமா
2 hours ago
உலகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago