ஏலூரு: ஆந்திராவில், நகராட்சி மன்ற தலைவரின் மனைவி நேற்று காலை நடைபயிற்சி சென்றபோது தெரு நாய்கள் துரத்தியதால் கோதாவரி கால்வாயில் விழுந்து உயிரிழந்தார்.
ஆந்திராவின், மேற்கு கோதாவரி மாவட்டம், நிடதஓலு நகராட்சி மன்ற தலைவர் பூபதி ஆதிநாராயணா (52). அண்மையில் நடந்த நகராட்சி தேர்தலில் நகராட்சி மன்ற தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது மனைவி ஆண்டாள் (49). இவர் நேற்று அதிகாலை நடைபயிற்சிக்கு சென்றார்.
கோதாவரி தண்ணீர் கால்வாய் ஓரமாக நடந்து சென்றபோது, தெரு நாய்கள் ஆண்டாளை துரத்தின. நாய்களிடம் இருந்து தப்பிக்க அங்குள்ள படித்துறையில் இறங்க முயற்சித்தபோது கால்வாயில் தவறி விழுந்தார். நீண்ட நேரம் ஆகியும் மனைவி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த நகராட்சி தலைவர் ஆதிநாராயணா, போலீஸில் புகார் அளித்தார்.
போலீஸார் தேடியபோது, உண்ராஜ வரம் கோதாவரி கால்வாயில் ஆண்டாளின் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
15 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
28 mins ago
உலகம்
30 mins ago
தமிழகம்
57 mins ago
சினிமா
45 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
சுற்றுலா
1 hour ago
வணிகம்
7 hours ago
இந்தியா
1 hour ago