3 பாஜகவினர் கொலையில் தொடர்புடையலஷ்கர் அமைப்பின் தீவிரவாதி கைது

By செய்திப்பிரிவு

ஜம்மு: காஷ்மீர் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “காஷ்மீரின் குல்காம் பகுதியில் 3 பாஜக பிரமுகர்கள் கடந்த ஆண்டு கொல்லப்பட்டனர். இதுபோல தெற்கு காஷ்மீரின் புரா பகுதியில் ஒரு காவலர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த ஜஹூர் அகமது ராதர் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் புதிய கிளை அமைப்பின் (தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்) முக்கிய பதவியில் இருப்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், ஜம்முவின் சம்பா மாவட்டம் பாரி பிராமனா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் ஜஹூர் தங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அனந்த்நாக் மற்றும் சம்பா மாவட்ட காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு அந்த வீட்டை சோதனையிட்டனர். அப்போது அங்கு தங்கியிருந்த ஜஹூரை கைது செய்தனர். அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த ஜஹூர், பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கி வருவதற்காக சம்பா மாவட்டத்துக்கு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

சுற்றுச்சூழல்

18 mins ago

தமிழகம்

49 mins ago

க்ரைம்

57 mins ago

தமிழகம்

54 mins ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்