புதுடெல்லி: நாடு முழுவதும் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. எட்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த ஜனவரி 26-ம் தேதி தினசரி தொற்று 10,000-க்கு கீழ் குறைந்தது. அதன்பிறகு நேற்று மீண்டும் 10,000-க்கு கீழ் வைரஸ் தொற்று பதிவானது. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரத்தில், நாடு முழுவதும் புதிதாக 9,309 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,08,80,603 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,05,89,230 பேர் குணமடைந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் 1,35,926 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 87 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,55,447 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் புதிதாக 652 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த மாநிலத்தில் 31,437 பேர் சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் நேற்று 5,397 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 63,961 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடகாவில் 430 பேர், ஆந்திராவில் 87 பேர், டெல்லியில் 142 பேர், உத்தர பிரதேசத்தில் 175 பேர், மேற்குவங்கத்தில் 217 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 min ago
கல்வி
6 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
வேலை வாய்ப்பு
2 hours ago
தமிழகம்
2 hours ago
கல்வி
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago