இன்றைய மக்களவை கூட்டத்தில் பங்கேற்க அனைத்து பாஜக எம்.பி.க்களுக்கும் கட்சி தலைமை கொறடா உத்தரவு

By செய்திப்பிரிவு

இன்று (பிப்ரவரி 13) நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில் அனைத்து பாஜக எம்.பி.க்களும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் என்று கட்சியின் தலைமைக் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தற்போது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவை, மாநிலங்களவையில் சூடான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பாஜக தலைமைக் கொறடா ராகேஷ் சிங் தனது கட்சி எம்.பி.க்களுக்கு ஒரு உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளார்.

பிப்ரவரி 13-ம் தேதி நடைபெறும் மக்களவைக் கூட்டத்தில் அனைத்து மக்களவை பாஜகஎம்.பி.க்களும் கலந்துகொள்ள வேண்டும். காலை 10 மணிக்கே அவையில் அவர்கள் தவறாமல் ஆஜராகவேண்டும்.

(பிப்ரவரி 13-ம் தேதி)மக்களவையில் மிகவும் முக்கியமான விவாதங்கள் நடைபெற்று, முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

எனவே மக்களவையிலுள்ள அனைத்து பாஜக எம்.பி.க்களும் தவறாமல் ஆஜராக வேண்டும். அரசு முடிவுகளுக்கு அனைத்துக் பாஜக எம்.பி.க்களும் துணை நிற்கவேண்டும் என்று தனது உத்தரவில் தலைமைக் கொறடா ராகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்