புதுடெல்லி: கரோனா ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கான உதவி எண்ணுக்கு 2.47 லட்சம் அழைப்புகள் வந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு நேற்று அளித்த எழுத்துபூர்வ பதிலில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கான உதவி எண்களை ஒருங்கிணைக்கும் (181) திட்டம் 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், கரோனா பரவலை தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட பொது முடக்க காலமான கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் மட்டும் 2.47 லட்சம் அழைப்புகள் வந்துள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு கேள்விக்கு அளித்த பதிலில், “போக்ஸோ இ-பாக்ஸ் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்துக்கு 354 புகார்கள் வந்துள்ளன” என கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
47 mins ago
சினிமா
49 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
கார்ட்டூன்
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago