கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள விட்டாலா விருப்பாக் ஷாகோயிலில் தெய்வப் புலவர் புரந்தரதாசரின் ஆராதனை விழா நேற்று நடைபெற்றது.
உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமான ஹம்பியில் உள்ள விட்டாலா விருப்பாக்ஷா கோயிலில் மகா அமாவாசையை முன்னிட்டு நேற்று தெய்வப் புலவர் புரந்தரதாசரின் ஆராதனை விழா நடைபெற்றது. கன்னட கலை மற்றும் கலாச்சாரத் துறை, புதிதாக உருவாக்கப்பட்ட விஜயநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும், சிறப்பு பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
நேற்று காலை 8 மணியளவில் துங்கபத்ரா ஆற்றங்கரையில் உள்ள விஜய விட்டாலா கோயில் கல் மண்டபத்தில் புரந்தரதாசர் ஞானம் பெற்றதாக நம்பப்படும் இடத்தில் உள்ள அவரது சிற்பத்துக்கு 10-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்தனர். அங்கு புரந்தரதாசரின் வாழ்வையும் கீர்த்தனைகளையும் விளக்கும் விதமான படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
மாலையில் விருப்பாக் �ஷாகோயில் மண்டபத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட கர்னாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்று புரந்தரதாசரின் கீர்த்தனைகளை பாடினர். கரோனா தடுப்பு விதிமுறைகளுடன் நடத்தப்பட்ட இவ்விழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பக்திப் பரவசத்துடன் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
10 mins ago
விளையாட்டு
15 mins ago
சுற்றுச்சூழல்
19 mins ago
இந்தியா
30 mins ago
சினிமா
37 mins ago
இந்தியா
33 mins ago
விளையாட்டு
41 mins ago
இந்தியா
23 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
59 mins ago
க்ரைம்
52 mins ago
இந்தியா
49 mins ago