ஹைதரபாத்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா. இவர், தெலங்கானாவில் புதிய கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார். இதற்கான முதற்கட்ட பணியாக, மாவட்ட அளவில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தும் பணியை அவர் நேற்று தொடங்கினார். இந்தக் கட்சிக்கு ‘ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி’ என பெயரிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டி சிறையில் இருக்க நேரிட்டது. அப்போது ஷர்மிளா ஆந்திரா முழுவதும் பாதயாத்திரை சென்று, தனது அண்ணனுக்காக பிரச்சாரம் செய்தார். அதன் பிறகு ஆந்திர அரசியலில் அவரது தலையீடு இல்லாமல் இருந்தது. இதனால் அண்ணன் – தங்கை இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தெலங்கானாவில் புதிய கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை ஷர்மிளா நேற்று ஹைதராபாத்தில் வெளியிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
இந்தியா
16 mins ago
விளையாட்டு
20 mins ago
தமிழகம்
32 mins ago
இந்தியா
56 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
53 mins ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
2 hours ago