புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று 11,831 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவர்களையும் சேர்த்து இதுவரை 1,08,38,194 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,05,34,505 பேர் குணமடைந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் 1,48,609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 84 பேர் உயிரிழந்தனர். கடந்த 10 நாட்களாக தினசரி உயிரிழப்பு 150-க்கும் குறைவாக உள்ளது. 17 மாநிலங்களில் நேற்று உயிரிழப்பு இல்லை. ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,55,080 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் புதிதாக 2,673 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 37,213 பேர் சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் நேற்று 3,742 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 65,414 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடகாவில் 487 பேர், ஆந்திராவில் 73 பேர், டெல்லியில் 119 பேர், உத்தர பிரதேசத்தில் 113 பேர், மேற்குவங்கத்தில் 193 பேர், ஒடிசாவில் 72 பேர், ராஜஸ்தானில் 75 பேர், சத்தீஸ்கரில் 186 பேர், தெலங்கானாவில் 101 பேர், ஹரியாணாவில் 67 பேர், குஜராத்தில் 244 பேர், பிஹாரில் 175 பேர், மத்திய பிரதேசத்தில் 184 பேர், அசாமில் 8 பேர், பஞ்சாபில் 207 பேர், காஷ்மீரில் 59 பேர், ஜார்க்கண்டில் 38 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago
தொழில்நுட்பம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
கல்வி
6 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
தமிழகம்
6 hours ago