புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று 14,849 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதுவரை 1,06,54,533 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 1,03,16,786 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 1,84,408 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒரே நாளில் 155 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,53,339 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் புதிதாக 2,697 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 45,093 பேர் சிகிச்சையில் உள்ளனர். கர்நாடகாவில் புதிதாக 902 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 7,361 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திராவில் புதிதாக 158 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 1,473 பேர் சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் நேற்று 6,036 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 72,891 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில் 197 பேர், உத்தர பிரதேசத்தில் 319 பேர், மேற்குவங்கத்தில் 410 பேர், ஒடிசாவில் 130 பேர், ராஜஸ்தானில் 203 பேர், சத்தீஸ்கரில் 377 பேர், தெலங்கானாவில் 197 பேர், ஹரியாணாவில் 136 பேர், குஜராத்தில் 423 பேர், பிஹாரில் 125 பேர், மத்திய பிரதேசத்தில் 291 பேர், அசாமில் 19 பேர், பஞ்சாபில் 211 பேர், காஷ்மீரில் 94 பேர், ஜார்க்கண்டில் 78 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
வாழ்வியல்
7 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
10 hours ago
ஓடிடி களம்
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago