புதுடெல்லி: ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின் போது பள்ளி, கல்லூரி பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்படுகிறது. வரும் 26-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள 72-வது குடியரசு தின விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் சுமார் 50 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் கோரக்பூரை சேர்ந்த அன்கிட் மிஸ்ரா தற்போது குவாஹாத்தியில் உள்ள ஐஐடி-ல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். பல்வேறு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள அவர், குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இவரது தாயும் தந்தையும் ரயில்வே துறையில் பணியாற்றி வருகின்றனர்.
இதேபோல உத்தர பிரதேசம் கோரக்பூரை சேர்ந்த திவ்யாங்கி திரிபாதி குடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் அமர உள்ளார். இவர் கடந்த ஆண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் 99.6 சதவீத மதிப்பெண்களை பெற்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
10 hours ago
வணிகம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago
இணைப்பிதழ்கள்
11 hours ago
க்ரைம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago