டெல்லி குடியரசு தின விழாவில் பிரதமருடன் 50 மாணவர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின் போது பள்ளி, கல்லூரி பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்படுகிறது. வரும் 26-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள 72-வது குடியரசு தின விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் சுமார் 50 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் கோரக்பூரை சேர்ந்த அன்கிட் மிஸ்ரா தற்போது குவாஹாத்தியில் உள்ள ஐஐடி-ல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். பல்வேறு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள அவர், குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இவரது தாயும் தந்தையும் ரயில்வே துறையில் பணியாற்றி வருகின்றனர்.

இதேபோல உத்தர பிரதேசம் கோரக்பூரை சேர்ந்த திவ்யாங்கி திரிபாதி குடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் அமர உள்ளார். இவர் கடந்த ஆண்டு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் 99.6 சதவீத மதிப்பெண்களை பெற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

வணிகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

க்ரைம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்