கர்நாடகா விபத்தில்ஒரே குடும்பத்தில் 11 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சிராஹள்ளியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், கோவாவில் திருமணத்துக்காக நேற்று வேனில் சென்றனர். தார்வாட் அருகே சென்று கொண்டிருந்த போது தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வந்த லாரி, வேன் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் வேனில் பயணித்த ஓட்டுநர் மஞ்சுநாத் உள்ளிட்ட11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற மீட்புக் குழுவினர் படுகாயம் அடைந்த 7 பேரை மீட்டு தார்வாட் மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தார்வாட் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ள 7 பேரில் 5 பேர் கவலைக்கிடமாக இருகின்றனர். இறந்தவர்களில் பெரும்பான்மையோர் பெண்கள். அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று போலீஸார் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

26 mins ago

ஓடிடி களம்

40 mins ago

க்ரைம்

58 mins ago

ஜோதிடம்

56 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

மேலும்