கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் சிராஹள்ளியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், கோவாவில் திருமணத்துக்காக நேற்று வேனில் சென்றனர். தார்வாட் அருகே சென்று கொண்டிருந்த போது தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வந்த லாரி, வேன் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் வேனில் பயணித்த ஓட்டுநர் மஞ்சுநாத் உள்ளிட்ட11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற மீட்புக் குழுவினர் படுகாயம் அடைந்த 7 பேரை மீட்டு தார்வாட் மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தார்வாட் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ள 7 பேரில் 5 பேர் கவலைக்கிடமாக இருகின்றனர். இறந்தவர்களில் பெரும்பான்மையோர் பெண்கள். அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று போலீஸார் கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 min ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
26 mins ago
ஓடிடி களம்
40 mins ago
க்ரைம்
58 mins ago
ஜோதிடம்
56 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago