விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டார் பிரதமர் மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி -7.7 சதவீதமாக குறையும் என மத்திய அரசின் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள முதல்கட்ட கணிப்பு தெரிவிக்கிறது. இதுபோல வேலையில்லாத் திண்டாட்டம் 9.1% ஆக உள்ளது. இந்த கணிப்பு பொருளாதாரத்தில் பிரதிபலித்தால் இது குறைந்தது 60 ஆண்டுகளில் இல்லாத, நாட்டின் மோசமான பொருளாதார செயல்திறனாக இருக்கும்.

புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி பல நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதை அரசு பொருட்படுத்தவே இல்லை. தனது தொழிலதிபர் நண்பர்கள் பலன் அடைவதற்காக, நாட்டுக்கு உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு துரோகம் இழைத்துவிட்டது. நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்காக குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்