கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2.25 லட்சமாக குறைந்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று 18,139 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவர்களையும் சேர்த்து இதுவரை 1,04,13,417 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,00,37,398 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 2,25,449 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 234 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,50,570 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் புதிதாக 3,729 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 52,276 பேர் சிகிச்சையில் உள்ளனர். கர்நாடகாவில் புதிதாக 761 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 9,138 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
ஆந்திராவில் புதிதாக 295 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 2,822 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் நேற்று 5,142 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 64,236 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
டெல்லியில் 486 பேர், உத்தர பிரதேசத்தில் 505 பேர், மேற்கு வங்கத்தில் 921 பேர், ஒடிசாவில் 230 பேர், ராஜஸ்தானில் 509 பேர், தெலங்கானாவில் 346 பேர்,சத்தீஸ்கரில் 1,010 பேர், ஹரியாணாவில் 274 பேர், பிஹாரில் 433 பேர், குஜராத்தில் 667 பேர், மத்திய பிரதேசத்தில் 774 பேர், அசாமில் 57 பேர், பஞ்சாபில் 277 பேர், காஷ்மீரில் 127 பேர், ஜார்க்கண்டில் 195 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
82 பேருக்கு புதிய கரோனா
இதைத் தொடர்ந்து பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு வந்துகரோனா உறுதி செய்யப்பட்டவர் களின் சளி மாதிரி மரபணு வரிசைபரிசோதனைக்கு உட்படுத்தப்படு கிறது. இதன்மூலம் அவர்கள் புதியவகை கரோனாவால் பாதிக்கப்பட் டிருக்கிறார்களா என்பது கண்டு பிடிக்கப்படுகிறது.
அந்த வகையில் நாடு முழுவதும் இதுவரை 82 பேர் புதிய வகை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அவரவர் மாநிலங்களில் தனிவார்டில் சிகிச்சை பெறுகின்றனர்.அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட் டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
வணிகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இணைப்பிதழ்கள்
10 hours ago
க்ரைம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago