கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்குகிறது. மேலும் 5 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
பிரிட்டனில் மரபணு மாறிய புதிய வகை கரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. அந்த நாட்டில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் 33,000 பேர் இந்தியா வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் கரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறவர்களின் மாதிரிகள், மீண்டும் மரபணு வரிசை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இதில் அவர்கள் எந்த வகை கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் நேற்று முன்தினம் நிலவரப்படி 20 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று மேலும் 5 பேருக்கு புதிய வகை கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 25 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் மட்டும் 4 வயது குழந்தை உட்பட 7 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 பேர் பெங்களூருவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
21,822 பேர் பாதிப்பு
மருத்துவமனைகளில் 2,57,656 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 299 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,48,738 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் 3,537 பேர், கர்நாடகாவில் 973 பேர், ஆந்திராவில் 349 பேர், கேரளாவில் 5,215 பேர், டெல்லியில் 677 பேர், உத்தர பிரதேசத்தில் 1,025 பேர், மேற்குவங்கத்தில் 1,178 பேர், ஒடிசாவில் 305 பேர், ராஜஸ்தானில் 770 பேர், சத்தீஸ்கரில் 1,069 பேர், குஜராத்தில் 799 பேர், மத்திய பிரதேசத்தில் 866 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
வணிகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இணைப்பிதழ்கள்
9 hours ago
க்ரைம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago