கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை4 லட்சத்துக்கும் கீழாக குறைந்தது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று 32,981 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 96,77,203 ஆக அதிகரித்துள்ளது. இதில் 91,39,901 பேர் குணமடைந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் 3,96,729 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 140 நாட்களுக்குப் பிறகு கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 4 லட்சத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. ஒரே நாளில் 391 பேர் உயிரிழந்தனர். 157நாட்களுக்குப் பிறகு உயிரிழப்பு எண்ணிக்கை 400-க்கு கீழாக குறைந்திருக்கிறது.

மகாராஷ்டிராவில் புதிதாக 4,757 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 81,162 பேர் சிகிச்சையில் உள்ளனர். கர்நாடகாவில் புதிதாக 1,321 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 25,400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆந்திராவில் புதிதாக 667 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 5,910 பேர் சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் நேற்று 3,272 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 59,467 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியில் 2,706 பேர், உத்தர பிரதேசத்தில் 1,932 பேர், மேற்குவங்கத் தில் 3,143 பேர், ராஜஸ்தானில் 2,089 பேர், சத்தீஸ்கரில் 1,229 பேர், ஹரியாணாவில் 1,498 பேர், பிஹாரில் 554 பேர், குஜராத்தில் 1,455 பேர், மத்திய பிரதேசத்தில் 1,455 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்