டெல்லி, கேரளா, மகாராஷ்டிரா, மேற்குவங்கத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.
நாடு முழுவதும் நேற்று 44,489 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 92,66,705 ஆக அதிகரித்துள்ளது. இதில் 86,79,138 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 36,367 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
மருத்துவமனைகளில் 4,52,344பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 524 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,35,223 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் புதிதாக 6,159 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 85,488 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 46,748 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் புதிதாக 1,630 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 24,909 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11,714 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் புதிதாக 831 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. மாநிலத்தில் 12,673 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,962 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் 5,378 பேர் பாதிப்பு
கேரளாவில் நேற்று 5,378 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 64,486 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2,148 பேர் உயிரிழந்துள்ளனர்.டெல்லியில் புதிதாக 5,246 பேர், உத்தர பிரதேசத்தில் 2,305 பேர், மேற்குவங்கத்தில் 3,528 பேர், ஒடிசாவில் 730 பேர், தெலங்கானாவில் 862 பேர், ராஜஸ்தானில் 3,285 பேர், பிஹாரில் 694 பேர், சத்தீஸ்கரில் 1,877 பேர், ஹரியாணாவில் 2,197 பேர், அசாமில் 182 பேர், குஜராத்தில் 1,540 பேர், மத்திய பிரதேசத்தில் 1,773 பேர், பஞ்சாபில் 770 பேர், ஜார்க்கண்டில் 237 பேர், காஷ்மீரில் 489 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டது.
தேசிய அளவில் டெல்லி, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி கரோனா தொற்றில்இந்த 6 மாநிலங்களில் மட்டும் 60.70 சதவீத தொற்று பதிவாகி உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
4 hours ago
ஓடிடி களம்
5 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
தமிழகம்
5 hours ago